Posts

Showing posts from January, 2025

FUTURE PONGAL

#டிஜிட்டல்_பொங்கல் அபார்ட்மெண்ட்டின் 167வது மாடியில் இருந்தது அவன் வீடு! ஜனவரி குளிர் ஜன்னல் கதவில் படிந்திருக்க உள்ளே மிதமான உறுத்தாத குளிர் ஏசியாக வீசிக் கொண்டிருந்தது. ‘தைப்பொங்கலும் வந்தது’ பாடலின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ் ரிங் டோனில் அலாரம் ஒலித்தது!  குவிந்து கிடந்த போர்வைக்குள்ளிருந்து குழந்தை பாகுபலியை ஏந்திய ராஜ மாதா போல ஒரு கை வெளிப்பட்டு அலாரம் ஒலித்த ஆப்பிள் ஐ போன் 76 Pro max ஐ எடுத்தது, நேரம் அதிகாலை 5:30! ஏங்க எழுந்துட்டிங்களா இன்னிக்கு பொங்கல் என்ற அவன்.. மனைவியின் அசரீரீ லேட்டஸ்ட் மாடுலர் கிச்சனில் இருந்து ஒலித்தது போர்வையை விலக்கி உதறி சோம்பல் முறித்தான், மீண்டும் தூங்க வந்த ஆசையை அடக்கிக் கொண்டான். எழுந்து பாத்ரூமிற்கு சென்று 15 நிமிடங்களுக்குப் பின் புதிய மலர் போல வெளியே வந்தான். ஷேவ் செய்த கன்னங்களில் ஓடிகலோன் மஸ்க் மணக்க, ப்ரஷ் செய்த பின் கொப்பளித்த ஸ்டிராபெர்ரி மவுத் வாஷில் வாய் மணக்க கிச்சனில் நுழைந்தான். அடர் பர்ப்பிள் மினி ஷார்ட்சும் வயலட் ஸ்லீவ்லெசும் அணிந்து குளித்து முடித்த அடையாளமாக தலையில் முடிச்சாக டவல்  கிச்சன் வேலைகளில் மும்முரமாக இருந்தாள் அவன் மனைவ...

☃️காஷ்மீர்

 #காஷ்மீர்_பயண_அனுபவங்கள்   நான் 2013 ஆம் ஆண்டில் ஜம்முவில் இருந்து ஶ்ரீநகருக்கு மலைச் சாலையில் காரில் பயணம் செய்த அனுபவம் மிகவும் திரில்லிங் நிறைந்தது. கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். 54 கிமீ தூரமுள்ள கொடைக்கானலே 3 மணிநேரப் பயணம் எனும் போது 300 கி,மீ மலைப்பயணம் எவ்வளவு நேரம் என்பதை ஊகிக்கவும்! முதலில் கொடைக்கானல் போலத்தான் அந்தப் பயணம் இருந்தது!  மலையேற ஏறத்தான் இமயத்தின் பிரமாண்டம் தெரிந்தது! சாலை விளிம்புப் பள்ளங்கள் 2000 அடி 5000 அடி என சரேல் சரேல் என செங்குத்தாக இறங்கி வைகுந்தத்தில் முடிந்தன! தூரத்து மலை மீது வைஷ்ணவி கோவில் தெரிந்தது! அந்த மலையை ஒருவித பயத்துடன் டூவீலரில் கோவிலை கடக்கும் போது சாமி கும்பிடும் ஸ்டைலில் விரல்களால் தாடையில் டைப்பிட்டு வேண்டிக் கொண்டோம்  வடக்கத்திய  டிரைவர்கள் மிக மிக அவசரமானவர்கள் போலும், இந்த அபாயகரமான சாலையில் 100 கி.மீ வேகத்திற்கு குறையாது மலை ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர். மலைப்பாதையில் கடை பிடிக்கும் எந்த ஒரு விதிமுறையும் அங்கு இல்லை ஒரு வேளை அந்த அதல பாதாளத்தில் அதை தள்ளிவிட்டு விட்டார்கள் போல, எ...

30. வங்கக் கடல்..

 30. வங்கக் கடல்.. #மார்கழியின்_மறை  இந்த 30ஆவது நாள் பாசுரத்தில் மாதவன் புகழோடு தன் சுய விவரத்தையும் பாடுகிறார் ஆண்டாள். ஆனால் பாசுரத்தில் சொல்லாத மெய்யான ஆண்டாள் - பயோகிராஃபி இதுவே 👇🏿 பெயர் : ஆண்டாள், இயற்பெயர் : கோதை,  உத்தேசமான பிறந்த ஆண்டு : கி.பி.885 அல்லது கி.பி 886  கண்டெடுக்கப்பட்ட நாள் & நட்சத்திரம் : கலியுகம் நள வருஷம் ஆடி மாதம் சனிக்கிழமை சுக்ல பட்சம் பூர நட்சத்திரம் வளர்ப்பு தந்தை பெயர் : பெரியாழ்வார் கணவரின் பெயர் : அரங்கன் ஶ்ரீரங்கம்  இவரது பட்டப் பெயர்கள் : சூடிக் கொடுத்த சுடர் கொடி, ஆண்டாள், கோதை, நாச்சியார்.  எழுதியவை : திருப்பாவை, நாச்சியார் திருமொழி.  திருப்பாவை பாடல் இலக்கணம் : இயற்றர விணை கொச்சகக் கலிப்பா. ஆண்டாளின் திருப்பாவை சங்கத் தமிழ்மாலை என போற்றப்படும் நூலாகும்! திருப்பாவை என்பது பின்னர் வந்த பெயராகும்!  இதில் இருக்கும் பாவை நோன்பு சங்க இலக்கியங்களிலும் வருகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதிலுள்ள தெய்வத்தை  கிருஷ்ணனாகவும் பாவித்து பாடினார் ஆண்டாள். உன் மனதில...

29. சிற்றம் சிறுகாலே..

29. சிற்றம் சிறுகாலே.. #மார்கழியின்_மறை கடந்த பாசுரத்தில் ஆயர்குலத்தின் தகுதிகளையும் தாங்கள் செய்யாத தவறுக்கு மன்னிக்கும்படியும் கேட்ட ஆண்டாள், மார்கழி முடிய இன்னும் 1 நாள் தான் இருக்கு கடந்த 28 நாட்களாகப் பாடுகிறோம் ஒரு வேளை ஆயர் குலத்தினர் கண்ணன் மீது கொண்ட அபிமானம் அவருக்கு புரியலையோ எனும் சந்தேகம் எழுகிறது ஆண்டாளுக்கு. பத்திரிக்கையாளர்களைக் கண்ட பிரதமர் போல கண்ணன் பதிலே பேச மாட்டேங்குறாரே! ஏன்? சரி! நமது ஆயர்குலத்தின் விஸ்வாசம் பற்றி இன்னும் விரிவாக இவரிடம் சொல்வோம் என்று “கண்ணா தினம் அதிகாலையில் வந்து உன் காலில் விழுந்து வணங்குகிறோம்” ஏனெனில் நாங்கள் எல்லாரும் பசுக்களை மேய்த்துக் கொண்டே.. பாடல்களைப் பாடி, வீட்டிலிருந்து சுமந்து வந்த எங்கள் கட்டுச் சோறை சாப்பிட்டு ஜீவனம் நடத்தும் ஆயர்கள். ஆனால் நீயோ பெருமைமிக்க கடவுள். நீ ஏற்றத் தாழ்வின்றி எங்கள் குலத்தில் வந்து பிறந்தாயே அதற்கு தான் உன்னை மதித்து துதிக்கிறோம். உன்னிடம் இருந்து எதையாவது கொடுன்னு கேட்டு அதை மட்டும் நாங்கள்.. வாங்கிக் கொண்டு போக வரவில்லை! உனக்கு நாங்கள் ஏதாவது ஒரு சின்ன உதவியாவது பதிலுக்குச் செய்யவேண்டும் என விரும்பு...

28. கறவைகள் பின் சென்று..

 28. கறவைகள் பின் சென்று.. #மார்கழியின்_மறை இதிகாசங்களில் புகழப்பட்ட முதல் வளர்ப்பு மகன் கண்ணன் தான் அவன் திடீரென ஒருவரால் அவனது 30 வயதில் வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டவன் இல்லை. மதுராபுரியில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பிருந்தாவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வளர்ந்தவன். பால் மணம் மாறாத சிசுவாக தன் சொந்தத் தாயின் தாய்ப்பாலைக்கூட அருந்தும் பாக்கியம் பெறாதவன்!  அதனால் தான் என்னவோ கோகுல பிருந்தாவனத்தில் அவன் பாலையும் வெண்ணையையும் திருடி திருடித் தின்றிருக்கலாம். யது குலத்தில் பிறந்த கண்ணனை ஆயர்குல மன்னனாக.. தங்கள் அன்பு ரமணனாகவே அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். “மன்னிப்பு” ஏய்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. ரமணா படத்தில் கேப்டனின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் இது.  கோலிவுட் ரமணாவுக்கு வேண்டுமானால் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கோகுலத்து ரமணனுக்கு அது மிகப் பிடிக்கும் என்கிறார் ஆண்டாள். சரி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்ததால்! ஆமாம் ஏன் தவறு செய்ய வேண்டும்? அது தெரிந்து செய்த தவறல்ல தெரியாமல் நடந்த தவறுகள்!  ஆக்சுவலி எங்க ஆயர்குலத்தோட குவாலிட்டி தெ...

27. கூடாரை வெல்லும்..

   27.  கூடாரை   வெல்லும்.. #மார்கழியின்_மறை  திருப்பாவை நோன்பிற்கும் இஸ்லாமியர்கள் கடை பிடிக்கும் ரமலான் நோன்பிற்கும் ஓர் ஒற்றுமையிருக்கிறது! நாங்கள் நெய், பால் இதையெல்லாம் உண்ண மாட்டோம், தலையில் பூச்சூட மாட்டோம், கண்ணுக்கு மையிட மாட்டோம், எங்களை அலங்கரித்துக் கொள்ள மாட்டோம் என்றெல்லாம் இந்நோன்பை துவக்கும் போது 2 ஆவது பாசுரத்தில் சூளுரைத்த ஆண்டாள்..   நோன்பு துவங்கி 27 ஆவது நாளில் தான் கூறிய விரதத்தை விடச் சொல்கிறார் எப்படி? தட்டு   நிறைய   பால்   சோ றி ட்டு   அதிலே   கரண்டி   கரண்டியாய்   நெய்யை   விட்டு   அந்தப்   பாலும் நெய்யும்   முழங்கை   வழியே  சறுக்குப் பலகையில் சரிவது  போல   வழிய   வழிய   சாப்பிட வேண்டுமாம் .  பாலும் வேண்டாம் நெய்யும் வேண்டாம் என்றவர் இப்போது இரண்டையும் ஒன்றாகவே சாப்பிடச் சொல்கிறார்.   அது மட்டுமா! கண்களில் மை தீட்டக்கூடாது, அலங்காரம் செய்து கொள்ளக் கூடாதுன்னு சொன்னவர் இந்த  உணவை  சாப்பிடப்   போகும்   முன்   ...

#கிஸ்கிஸ்_கிச்சடி

விளம்பரத் துறையில் ரீபொசிஷன் என்று ஒன்று இருக்கிறது, முன்பு நாம் சரியாகச் செய்யாத அதே விஷயத்தை அடுத்த முறை மிகச் சரியாக செய்வதற்கு தான் அந்தப் பெயர்! கிச்சடியும் அப்படித்தான் சரியான பதத்தில் செய்யா விட்டால் அதை அடுத்த முறை சிறந்த கிச்சடியாகச் சமைத்து ரீ பொசிஷன் செய்யவேண்டும்! சரி இந்த உப்புமா & கிச்சடி இந்த இரண்டுக்கும் வேறுபாடு என்ன?  உப்புமாவில் ரவை, வெங்காயம், சென்னா தால், கடுகு, கடலை பருப்பு அல்லது முந்திரி மட்டும் இருக்கும். கிச்சடியில் இவற்றோடு தக்காளி, உருளை, பட்டாணி, கேரட், பச்சை மிளகாய் போன்ற காய்களும் இருக்கும். உப்புமாவுக்கு வெள்ளை நிறம் போல கிச்சடிக்கு மங்கலகரமான மஞ்சள் நிறம்! உப்புமாவை உதிராக புட்டு போலவும் செய்யலாம் நல்ல குழைவாகவும் செய்யலாம்! ஆனா கிச்சடியை குழைவாக மட்டுமே செய்யணும்! கேப்பக் களி பார்த்து இருக்கிங்களா அந்த கன்ஸிஸ்டன்ஸியில் இருக்கணும். மேலே வெல்வெட் மாதிரி மென்மையா இருக்கணும்! சாப்பிட்டா அப்படி சாஃப்டா இருக்கிற கிச்சடியைத் தான் சாப்பிடணும். கிச்சடிக்கு மிகச் சரியான ஜோடி தேங்காய் சட்னிதான். சாம்பார் என்றால் அரைச்சிவிட்ட சாம்பார், கோசுமல்லி ரெண்டுமே ப...

26. மாலே மணிவண்ணா…

 26. மாலே மணிவண்ணா.. #மார்கழியின்_மறை மனிதர்களில் பேராசைகள் ஏதுமின்றி தனக்கு இதுபோதும் என்ற மனநிறைவு அடைகிறவர்கள் அரிதினும் அரிது. உனது ஆசை என்ன எனப் பொதுவாக யாரிடமாவது கேட்டால் சொகுசான கார், பெரிய பங்களா, தங்க & வைர நகைகள், வித விதமான ஆடைகள், கோடி கோடியாக பணம், எஸ்டேட், தோட்டம், பண்ணை வீடு, வெளிநாட்டில் ஒரு தீவு எனப் பட்டியலிடுவார்கள்.  ஏனெனில் இவர்கள் தனது ஒரு ஓட்டுக்கே பத்தாயிரம் வாங்குபவர்கள் அல்லவா! ஆனால் ஆண்டாள் இவற்றில் ஒன்று கூட கேட்கவில்லை! அவளது பட்டியலில் இதெல்லாம் இல்லை. அவர் பட்டியல் வேறு அதைப் படிப்போமா.. மணிவண்ணா! இம்மார்கழி நீராட எமக்கு எம் முன்னோர்கள் செய்த நெறிகளின் படி உமக்கு என்ன வேண்டும் என நீ கேட்டால், “இதோ இது தான் என் தேவைகள்.. உலகமதிர முழங்கும் உன் பாஞ்சசன்யம் போல பல வெண் சங்குகள் வேண்டும், பெரும் ஒலி தரும் பறைகள் வேண்டும், பல்லாண்டு உன்னைப் போற்றிப் பாடிட ஓதுவார்கள் வேண்டும், அழகிய விளக்குகள் வேண்டும், கொடி மரங்கள் வேண்டும், அக்கொடி மரத்தில் கட்டிட வெண் சீலைகள் வேண்டும் ஆலிலைக் கண்ணா இவை எல்லாம் எமக்கு நீ அருளினாலே போதும் அவ்வளவுதான்! பாருங்கள் இப...

25. ஒருத்தி மகனாய்…

 25. ஒருத்திமகனாய்.. #மார்கழியின்_மறை கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண் ஆண்டாள்! கண்ணன் மேல் கொண்ட அன்பால் முத்தையா என்னும் தன் இயற்பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர். தனித் துவம்மிக்க பல கவிதைகளை எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன் பல பாடல்களில் எடுத்துக் கொண்டார். தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெறும் “ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்” என்ற இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றிய பாடல் என்போரும் உண்டு. முத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய் தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்! அவர் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள். எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோல அமைந்தது விட்டது ஆச்சரியம் தான்! ஆண்களில் பிறந்தவீடு ஒன்று புகுந்த வீடு ஒன்று எனப் பிறந்து வாழ்ந்த அவதாரம் கண்ணன் தான்! அதுவும் பிறந்த அந்த இரவே தான் பிறந்த இடத்தில் இருந்து வளரும் இடத்திற்கு மாற்றப்பட்டவன். தேவகி என்னும்..  ஒருத்திக்கு பிறந்து யசோதை என்னும் ஒருத்தியிடம் ஒளிக்கப்பட்டு வளர்ந்த ஒப்பில்லாதவன். கண்ணனின் தாய்மாமன் கம்சன் தனது தங்கையின் குழந்...

24. அன்று இவ்வுலகம்…

 24. அன்று இவ்வுலகம்.. #மார்கழியின்_மறை திருமாலை அவதாரங்களின் அரசன் என்று சொல்லலாம். பூவுலகில் தீமைகள் தலையெடுக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து வந்து உலக மக்களை காப்பவன்! அவன் காக்கும் கடவுள் அல்லவா. சரி கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் தானே! அவர் ஏன் அவதாரம் எடுத்து வந்து தீயவர்களை அழிக்கவேண்டும்? அவர் நினைத்தால் தன் சக்தியால் ஒரு நொடியில் தீமை செய்பவர்களை அழித்துவிடலாமே?  நியாயமான கேள்வி! கடவுள் ஏன் பூமிக்கு அவதாரம் எடுத்து வருகிறார்? அவரும் ஆசாபாசங்கள் உள்ள மனிதனாகப் பிறந்து மற்ற மனிதர்கள் மத்தியில் வாழும் போது பிறர்க்கு உதாரணமாக வாழ வேண்டும்! எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என உணர்த்தவும், சகல உறவுகளோடு பிறந்து அவர்களை விட்டுக் கொடுக்காது அரவணைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் திருமாலின் அவதாரங்களைப் பற்றி “போற்றிப் பாடடி பெண்ணே” என கிருஷ்ண’தேவர்’ கேட்காமலேயே அவரைப் போற்றி அவரது பெருமையைப் பாடுகிறார். இக்கால அரசியல்வாதிகள் பதவிக்காக சொல்லும் உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்கி எனும் பொய் போல இல்லாமல் மெய்யாகவே பாடுகிறார்! விஸ்...

23. மாரி மலை முழஞ்சில்…

 23. மாரி மலைமுழஞ்சில்.. #மார்கழியின்_மறை இன்றைக்கு ஒருவரை சிங்கம் போல இருக்கிறார் என்ற உவமையை அதற்கு துளியும் பொருத்தமில்லாத ஆட்களுக்கு பயன்படுத்துவதை பரவலாகப் பார்க்கிறோம்! ஏரியா கவுன்சிலரின் ஒன்று விட்ட சித்தப்பா மகனுக்கு கூட சிலிர்த்தெழுந்த சிங்கமேன்னு பிளக்ஸ் அடிக்கும் அல்லக்கைகள் இருக்கிறார்கள்! ஆண்டாள் கண்ணனை சிங்கம் என்று அழைப்பது அதுபோல அல்ல!  அவர் நரசிம்மமாக அவதாரம் எடுத்தவன் என்பதால்! அந்த சிங்கம் போன்ற வீரத்தால் எதிரிகளை அழித்தவன் மக்களை காத்தவன்! அடைமழைக் காலத்தில் தன் மலைக்குகையில் உறங்கி ஓய்வெடுத்த சிங்கம் அக்காலம் முடிந்ததும் துயிலெழுந்து கண்ணில் தீ பறக்க வீரமாய் அதன் பிடரியை சிலிர்த்து உடம்பை உதறி நெட்டி முறித்து நான்கு பக்கமும் பார்த்து பின்னர் கம்பீரமாக கர்ஜனை செய்து..  தன் குகையை விட்டு வெளியேறுவது போல காயாம்பூ நிறக் கண்ணா நீயும் எழுவாயாக! உன் பரந்த மாளிகையிலிருந்து வெளியேறி உனக்கான சிங்காசனத்தில் அமர்ந்து அடியவர் நாங்கள் உன்னிடம் கேட்ட கோரிக்கைகளை சீர் தூக்கிப் பார்த்து எங்களுக்கு அதை அருள வேண்டும் என்கிறார். இதில் வியப்பான விஷயம் அந்த காலத்திலேயே ஆண்...

22. அங்கண்மா ஞாலத்து…

 22. அங்கண்மா ஞாலத்து... #மார்கழியின்_மறை ஹே.ஹே.ஹே.. இந்த பாட்ஷா யாருக்கும் கெட்டது செய்யமாட்டான்.. தன்ன நம்பி வந்தவங்கள கைவிடவே மாட்டான்.. என்னை நம்பாம கெட்டவங்க அதிகம், நம்பிக் கெட்டவங்க யாருமில்லை இப்ப முடிவு பண்ணிக்கோங்க இந்த பாட்ஷாவா இல்ல அந்த மார்க் ஆண்டனியா? இப்படி பாட்ஷா படத்தில் ரஜினி கேட்கும் காட்சி நினைவிருக்கிறதா! உடனே அந்த எல்லா பெரிய டான்களும் பாட்ஷாவின் புறங்கையில் முத்தமிட்டு ஏற்றுக் கொள்ளுவார்கள். அப்படி ஒரு காட்சியை ஆண்டாளும் பாசுரத்தில் வைத்திருக்கிறார்! உலகின் பெரும் அரசர்கள் யாவரும் திருமால் வசம் சரணடைய அவன் காலடியில் வந்து காத்திருக்கிறார்கள் என்று. பார்த்தால் பசி தீரும்.. பாவம் தீருமா.?  கண்ணனின் கண் பார்வை நம்மீது பட்டால் அது சாத்தியம் என்கிறார் அதற்கு அவனைச் சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார். ஆண்டாளின் உவமைத் திறன் மிளிரும் மற்றொரு பாடல் இது. அலைகள் தாலாட்ட திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார் நாராயணன் அவரைக் காண அவர் பார்வை நம் மீது படாதா? என்று..  உலகைக் கட்டியாளும் பெரும் சக்ரவர்த்திகள் அனைவரும் தங்கள் பராக்கிரமங்களை மறந்துவிட்டு வந்...

21. ஏற்ற கலங்கள்…

 21. ஏற்ற கலங்கள்... #மார்கழியின்_மறை பாசுரங்கள் முழுவதும் பசுக்களை வள்ளல்கள் என்று ஆண்டாள் விளிக்கிறார். விசு படத்தின் எல்லா படங்களிலும் தவறாமல் வரும் ஆஸ்தான நடிகர்கள் போல பல பாசுரங்களில் யாராவது அதிகாலையில் எங்காவது பாலை கறந்து கொண்டு இருப்பார்கள் அல்லது பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும். செல்வம் தரும் பால் வளம் மிக்க பசுக்கள் அடிக்கடி வந்து போகும்! தன் கன்றின் குரல் கேட்ட பாசத்தில் தானாகப் பாலைப் பொழியும் மாடுகள், எருமைகள், கன்றுகள் வீட்டை பால் சகதியாக்கும்! இப்படிப் பெரும் பால் வளத்தையும், பசு & எருமைகளையும் திருப்பாவையின் ஆஸ்தான பாத்திரங்களாக பாசுரமெங்கும் காணலாம்!  இந்தப் பாத்திரங்களில் வரும் பசுக்களின் பாலை பாத்திரம் வைத்து கறக்கும் போது அந்தப் பால் பாத்திரத்தில் அதி வேகமாய் வீழ்ந்து அடுப்பில் பொங்குவது போல எதிர்த்து பொங்குகிறது என்கிறார்! {நியூட்டனின் விதி} கடந்த இரு நாட்களாக பாடிய பாசுரங்களுக்கு  கண்ணன் சிறிதும் செவி சாய்க்கவில்லை! அப்போது என்ன செய்ய? சடாரென சரணாகதி தானே! இதோ ஆண்டாள் உருகிப் பாடுகிறார்.! பசுக்களிடம் இருந்து கலத்தில் கறக்கும் ப...

20. முப்பத்து மூவர்…

 20. முப்பத்து மூவர்... #மார்கழியின்_மறை  திருப்பாவையில் பஞ்ச் டயலாக்!  “நான் சொல்றதை தான் செய்வேன்.. செய்யறதை தான் சொல்வேன்”. “ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்” “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” இவை அனைத்தையும் விட ஒரு அருமையான பஞ்ச்டயலாக்கை ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் வைக்கிறார்!  கடந்த பாசுரத்தில் கட்டிலில் நப்பின்னையின் மார்பில் தலை வைத்து ரொமாண்டிக்காக உறங்குகிறான் கண்ணன் என்றவர், அப்படி ஒரு சுகமான தூக்கத்தில் அந்த  ஒரு பாட்டுக்கே எழுந்துவிட்டால் நன்றாக இருக்குமா? ஆகவே இந்தப்பாடல் அவர்களை எழுப்பும் 2வது பாடல்..  இந்தப்பாடலில் அவர் கண்ணனின் வீர தீர பராக்ரமத்தை சொல்லி ஆரம்பிக்கிறார். இதன் உள் குத்து.. இவ்வளவு வீரமுள்ள ஆளு நீ ஒரு பொண்ணு மார்ல சாஞ்சிகிட்டு தூங்கிட்டு இருக்கியேய்யா என உசுப்பிவிடத்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பிரச்சனை என்றால் யாரும் சொல்லாமல் அங்க வருகின்ற வீரா.. ஓழுக்கத்தில நீ கில்லி, துணிச்சலா அடிப்ப சொல்லின்னு ஆரம்பிச்சு, வைக்குறார் பாருங்க ஒரு பஞ்ச்.. "உன் பேரைக்கேட்டாலே எதிரிகளுக்கு காய்ச்...

19. குத்து விளக்கெரிய…

 19. குத்து விளக்கெரிய... #மார்கழியின்_மறை இந்த உலகிலேயே மக்களை தூக்கத்திலிருந்து எழுந்திருக்கச் சொல்லி அதிக விழிப்புணர்வை ஊட்டியது ஆண்டாளாகத்தான் இருக்கும். நீங்கள் தூங்கியது போதும் விழித்தெழுங்கள் என்னும் முழக்கத்தை திருப்பாவை முழுவதும் முழங்கிக் கொண்டே இருக்கிறார் போராளி ஆண்டாள்! அப்படித் தூங்குவது போல தூங்கினால் ஆண்டாள் நம்மை அழகுத் தமிழில் பாடி எழுப்புவார் என்று எண்ணி கூட பலர் தூங்கியிருக்கலாம்! இன்று நப்பின்னையையும் கண்ணனையும் எழுப்புகிறார். அவர்கள் தூங்கும் அறையை பாருங்கள் வாசல் நிலை விளக்குகள் நின்றெரியும் உறுத்தாத வெளிச்சம், யானை தந்தத்தில் செய்த டபுள் காட் கட்டில்,மேலே அன்னப் பறவையின் சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு எல்லாம் நிரம்பிய மென் மெத்தை, அழகிய வெண்ணிற திரைச் சீலைகள், சுகமாகச் சில்லிடும் மார்கழிக் குளிர் இத்தனைக்கும் நடுவே கொத்தான நறுமண மலர்களை சூடிக் கொண்ட நப்பின்னை!  படுத்து உறங்க இத்தனை மென்மெத்தைகள் இருந்தும் போதாதென அவள் மார்பகங்களில் தலை சாய்த்து உறங்கும் கண்ணா! நீவாய் திறந்து பேசு! அழகிய மையிட்ட பெரிய விழிகளை உடைய நப்பின்னையே, நீயாவது உன் கணவனை விட்டு வில...

18. உந்துமத களிற்றன்…

 18. உந்து மதகளிற்றன்.. #மார்கழியின்_மறை மாதவிப் பந்தல் என்றால் என்னவென்று தெரியுமா? மல்லிகைக் கொடிகள் அடர்ந்து படர்ந்து பந்தல் போல இருப்பதே! அதாவது இன்றைய அரசியல்வாதிகளுக்கு வைக்கும் மலர் அலங்கார வளைவு போன்றது. ஒரு முழம் மல்லிகையே மணம் வீசி நம்மை கிறங்க வைக்கும். ஒரு பந்தல் முழுவதும் மல்லிகைக் கொடி! அப்பந்தலில் மறைந்து வசிக்கும் குயில்கள் பல முறை கூவிவிட்டன!  அடிப் பெண்ணே! நறுமணம் வீசும் கூந்தல் உள்ளவளே! உன் வளையோசை கல கலகலவென ஒலிக்க தாமரை மொட்டை கையில் ஏந்தியது போன்ற உனது அழகிய விரல்களால் தாழ்நீக்கி இந்தக் கதவை திறந்துவிடு என்றழைக்கிறார். யாரை? கடந்த 17 ஆண்டாள் பாசுரங்களில் வராது திடீரென இந்த 18 ஆம் பாசுரத்தில் வந்து அறிமுகமாகிறார் நப்பின்னை என்னும் பெண்!  டிவி சீரியல்களில் இந்த வாரம் முதல் இவர் தான் இனிமேல் இந்த கேரக்டர் என அறிவிப்பது போல இவர் தான் கண்ணனின் முறைப் பெண் எனவும் இவளையும் அவர் மணந்து கொண்டார் என்பாரும் உண்டு! திருப்பாவையின் 18 ஆம் பாசுரத்தில் கெளரவ தோற்றத்தில் அறிமுகம் ஆகும் இந்த நப்பின்னை பாத்திரம் தொடர்ந்து அடுத்தடுத்து சில பாசுரங்களில் தலை காட்டுகிறார்....

17. அம்பரமே தண்ணீரே…

 17.அம்பரமே தண்ணீரே... #மார்கழியின்_மறை குடும்பங்களில் ஊடலிலுள்ள கணவன் மனைவி இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் பேசுவது போல “உங்கம்மா என்ன சொல்றா? கேளு” எனக் கணவன் கேட்பதும் “என் முடிவு அதுதான்னு உங்கப்பா கிட்ட சொல்லு” என மனைவி பதிலுரைப்பதும் சாதாரணம். ஆம்! நமக்கு மிகப் பிடித்தவர்களைப் பற்றி பேச வெட்கப்படும் வேளையிலும் இதே போல கொஞ்சம் ஜாடையாகப் பேசுவது வழக்கம்.  இங்கும் ஆண்டாள் அவர் உள்ளம் கவர்ந்த கண்ணனை எழுப்ப வேண்டும்! ஆனால் உடனே கண்ணனை நீ எழுந்திரு என்று எழுப்பி விடாமல் மெல்ல ஒவ்வொருவராக எழுப்பி கடைசியில் கண்ணனை எழுப்பிவிடச் சொல்கிறார்! முதலில் நந்தகோபா நீ எழுந்திரு, தாயே யசோதா நீயும் எழுந்திரு, அப்பா பலராமா அப்படியே நீயும் எழுந்து உன் தம்பி கண்ணனையும் எழுப்பு என்கிறார் ஜாடை மாடையாக!  மனமுருகக் கடவுளிடம் அவர் வேண்டும் போதும் உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர் இம்மூன்றையும் தாவென உலகில் முதன் முதலில் கேட்டது ஆண்டாளாகத் தான் இருக்க வேண்டும்! இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என இன்று மதங்களை கடந்து நிற்கும் மந்திரச் சொற்களுக்குச் சொந்தக்காரி நம் நாச்சியார...

16. நாயகனாய் நின்ற…

 16.நாயகனாய் நின்ற.. #மார்கழியின்_மறை அன்றைய அரசர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதற்கு அத்தாட்சியாக ஒரு முத்திரை மோதிரமோ பதக்கமோ தருவார்கள். அதைக் கொண்டு போய் உரியவரிடம் காட்டினால் நமக்குத் திறக்காத கதவுகளும் திறக்கும். நமக்கு வேண்டியதும் கிடைக்கும் என படித்து இருப்போம். ஆண்டாள் இப்பாசுரத்தில் நந்தகோபன் மாளிகையின் வாயிற் காப்போனிடம் அத்தாட்சியாக எதைச் சொல்கிறார் தெரியுமா?  “மாயக்கண்ணன் நேற்றே எங்களிடம் வந்து பெண்களே என்னிடம் நீங்கள் வேண்டியதை பரிசாக அளிப்பேன் என்ற வார்த்தையை நம்பி இங்கு வந்துள்ளோம்! அந்தக் குறும்பன் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவான். எங்களை வரச்சொல்லிவிட்டு நல்ல உறக்கத்தையும் தருவதில் மன்னன் அந்த மணிவண்ணன்! ஒரு வேளை நாங்கள் எங்கள் தோழியரை எழுப்பாமல் விட்டுவிடலாமா?  அது குற்றமாகிவிடுமே! அவர்களை எழுப்பத்தான் நாங்கள் நோன்பு இருந்து அதிகாலை நீராடி தூய்மையாக இத்தோரண வாயிலுக்கு வந்துள்ளோம்! தோரணையோடு இந்த வாயிலைக் காப்போனே! உனது தோரணையை விட்டுவிட்டு எங்களை உள்ளே விடு! நாங்கள் வந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு! அழகிய இம் ...

15. எல்லே இளம்கிளியே…

 15.எல்லே இளம்கிளியே #மார்கழியின்_மறை  கடந்த 14 பாடல்களில் தோழியரை பாடல்களால் எழுப்பிய ஆண்டாள் இந்த 15 வது பாடலிலிருந்து அவர்களோடு பேசுகிறார்.. ஒருவரின் குணநலன்கள் பற்றி அறிந்து நெடுநாள் பழகிய இருவர் பேசும் போது பேச்சில் நக்கலும் நையாண்டியும் தொனிக்கும் அல்லவா. "நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத்தெரியும் இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம் மகனே"என்று கவுண்டமணி சொல்வது போல. பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை நாம் கவனிப்பதில்லை நிறைய சானல்களில் ரிமோட்டை தேட வைப்பது சுவாரஸ்மில்லாத பேச்சுகள் தான். ஆண்டாளின் இந்த பாசுரத்தின் விளக்கத்தை மட்டும் வட்டார வழக்கான மதுரைத் தமிழில் இருவர் பேசிக் கொள்வதைப் போல பார்க்கலாமா.! எளியவர்களின் மொழியில் படிக்கஒரு சுவாரஸ்யம் கிடைக்கும் என்பதற்காக... எழுப்புபவர்கள் : இந்தா புள்ள கிளி மாதிரி இருக்குற பொண்ணே! எம்பூட்டு நேரந்தான் தூங்கி கிட்டு கிடப்பே.. படுத்து இருக்கும் பெண் : ஏ.. இங்காரு.. என்ன எல்லாரும் கீச் கீச்னு சலம்புறிங்க கொஞ்சம் பேசாம இருங்க இந்தா வாரேன்.. எழுப்புபவர்கள் : ஏய்ய்ய் நீ நெசமாவே பெரிய ஆளு தான்.. நீ இப்படித...

14. உங்கள் புழக்கடை…

 14. உங்கள் புழக்கடை... #மார்கழியின்_மறை எல்லாமே லேட்டஸ்ட் பாத்ரூம் ஃபிட்டிங் சார் கிட்டத்தட்ட 25 இலட்சம் செலவாச்சு ஒரு ஸ்டீம் பாத் & மல்டி ஷவர் சேம்பர் பிக்ஸ் பண்ணியிருக்கேன் வாட்டர் பிரஷர்ல தெறிக்கும் பாருங்க அதுல குளிக்கிறதே தனி சுகம் பைப் எல்லாம் ஜாகுவார் கம்பெனி. சின்னக் குழந்தைகளுக்கு ரிவால்விங் பாத்டப் கூட ஒண்ணு இருக்கு. இது இன்றைய வசதி படைத்தவர்களின் குளியலறை. ஆனால் 25 இலட்சமல்ல 25 கோடி கொடுத்தாலும் கிட்டாத நேச்சுரல் பாத்ரூம் ஆண்டாள் காலத்தில் இருந்திருக்கிறது! பாருங்கள் வீட்டு பின் புறத்தில் அமைந்துள்ள குளம் அங்கு செந்தாமரைகள் மலர்ந்தும் அல்லிகள் மொட்டாகவும் காணப்படுகிறது. மார்கழி என்பதால் நிச்சயம் அதில் சில்லென்ற நீர்.! இப்படி ஒரு ஜில் ஜில் குளத்துக் குளியலை மல்டி ஷவர் தருமா.? அந்த பெண்ணை எழுப்புகிறார்.. பெண்ணே காலையில் சூரியன் உதித்து தாமரை மலர்ந்து அல்லி மூடி விட்டது வெண்ணிறப் பற்கள் மின்ன காவியணிந்த துறவிகள் அவர்களது ஆன்மிகக் கடனாற்ற சங்கு முழங்க கிளம்பிவிட்டனர். உங்களையெல்லாம் நானே வந்து எழுப்புவேன் என ஜம்பமாக வாயாடிவிட்டு நீயே இப்படி தூங்கலாமா? இப்படி உறங்க உனக்க...

13. புள்ளின்வாய் கீண்டானை…

 13. புள்ளின்வாய் கீண்டானை... #மார்கழியின்_மறை  திருப்பாவையை எல்லாரும் விரும்பக் காரணம் இதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம். இப்பாசுரத்தின் முதல் வரியில் கிருஷ்ண அவதாரத்தில் கொக்கின் வடிவில் வந்த பகாசூரனின் அலகைப் பிளந்ததையும் அடுத்த வரியில் ராம அவதாரத்தில் இராவணனின் பத்துத் தலைகளைக் கிள்ளி எறிந்ததையும் பாடுகின்றார் ஆண்டாள். அவதாரங்கள் வேறாகினும் அவர் வீரம் எப்போதும் மாறாது! அத்தகைய வீரம் மிகுந்தவரின் புகழ் பாட எல்லாப் பெண்களும் முன்பே சென்றுவிட்டனர். பார் வானில் வெள்ளி முளைத்து வியாழன் உறங்கிவிட்டது. நீயும் அந்த வியாழன் போல உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறங்குவது போல நடிக்கிறாயா?  பார்! இந்த அதிகாலையில் பறவைகள் கூட எழுந்து சப்தமிடுகின்றன தாமரை மீது வண்டமர்ந்தது போல கண்ணுள்ள பெண்ணே நீ இன்னுமா உறங்குகிறாய்? உன் உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து குளிரக் குளிர நீராடு என்றழைக்கிறார். இப்பாசுரத்தில் வியத்தகு விஞ்ஞானம் உள்ளது. பூமி மட்டுமின்றி பிற கோள்களின் உதய அஸ்தமன நேரங்களையும் இன்றைய அறிவியல் முன்னேற்றத்தால் கண்டுபிடித்து இருக்கிற...

12. கனைத்து இளம்..

 12. கனைத்து இளம்.. #மார்கழியின்_மறை நினைத்தவுடன் நடந்துடும்னு எதிர்பார்க்காதே! நினைச்சா மட்டும் அது நடந்துடுமா! உட்கார்ந்து நினைச்சிகிட்டே இருந்தா செய்யறது யாரு? இவையெல்லாம் ஒரு செயலைச் செய்யாமல் நினைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து நாம் கேட்பது! ஆனால் தாய்ப்பாசம் அப்படியல்ல! மனதால் நினைத்தாலே போதும்.அதனால் ஏற்படும்  விளைவுகள் தன்னால் நடக்கும்! அது மனிதனோ விலங்கோ அனைவருக்கும் பொதுவானது என்கிறார் நமது நாச்சியார்.  மருத்துவமனைகளின் பிரசவ வார்டில் நள்ளிரவில் அன்று தான் குழந்தையை பிரசவித்த அலுப்பால் அயர்ந்து உறங்கும் தாய் அங்கிருக்கும் அத்தனை குழந்தைகளில் தன் குழந்தையில் குரல் கேட்டால் மட்டும் சட்டென உறக்கம் கலைந்து எழுவார். இது இயற்கை நமக்களித்த வரம்! இறைவன் இதை ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டும் இன்றி விலங்குகளுக்கும் படைத்துள்ளான்.  வெளியூரில் தங்கி படிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள் தங்கள் தாயை நினைக்கும் வேளையில் அவர்கள் அம்மாவிடமிருந்து அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும்! இதுபோல பலருக்கு நடந்துள்ளது! எதையும் சாதிக்க நம்மைப் பெற்ற அம்மாவின் குரல் ஒன்று போதும்! அதுவ...

11. கற்றுக் கறவை…

 11. கற்றுக் கறவை... #மார்கழியின்_மறை சினிமாப் பாடல்களில் மின்னல் இடை, கொடியிடை, இஞ்சி இடுப்பழகி இப்படி எல்லாம் இடுப்பை பற்றி பாடல்கள் பல உண்டு! “இல்லையென்று சொல்வதுந்தன் இடை அல்லவா மின்னல் இடை அல்லவா” எனக் கவிஞர் கண்ணதாசனும்.. “இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடி போல் மெல்ல வளையும்.” என கவிஞர் வாலியும் எழுதியதற்கு இப்பாசுரமே தூண்டுகோல்.! ஆண்டாள் இடைக்கு என்ன உவமை தருகிறார் தெரியுமா.! புற்றில் இருக்கும் பாம்பு எடுக்கும் படத்தைப் போன்ற இடை என்கிறார். பாம்பு படம் எடுக்கும் வரை அது தெரியாது எடுத்த பின்பு சரேலென விரியும்! அதாவது இருப்பதும் தெரியாது விரிவதும் தெரியும்.! புற்று அரவு அல்குல் என்கிறார் என்ன அழகான உவமை ஆனால் அல்குல் என்பது இடையல்ல அது பெண்ணின் பிறப்புறுப்பு எனும் வாதமும் உண்டு! அது தான் நாகத்தின் விரித்த படம் போல இருக்கும் இன்றைய உரையாசிரியர்கள் நாகரிகம் கருதி அல்குலை இடையாக்கி விட்டார்கள் என்ற கருத்தும் இருக்கிறது! அப்படிப் பார்த்தால் தமிழில் யோனி பற்றி எழுதிய முதல் பெண்ணியவாதி ஆண்டாள் தான். எப்படியோ அவர் சொன்ன அந்த உவமை இரண்டிற்கும் மிக அழகாகப் பொருந்துகிறதே!  கன்றுக...

10. நோற்றுச் சுவர்க்கம்...

 10. நோற்றுச் சுவர்க்கம்... #மார்கழியின்_மறை நாற்றம் அடிக்குது என்று மூக்கைப் பொத்திக் கொள்கிறோம். ஆனால் நாற்றம் என்றால் நல்ல மணம் என்றே அர்த்தம். துளசியை அழகுத் தமிழில் துழாய் (திருத்துழாய்) என்கிறார். துளசி வாசம் வீசும் நம் தவசியின் பெருமையைப் பாடு அவனை விரதமிருந்து துதித்தாலே போதும் உன் சொர்க்க வாழ்விற்கு நான் கேரண்டி என்கிறார் ஆண்டாள். சொர்க்கம் புகவேண்டும் என விரதம் இருக்கிற பெண்ணே நீ கதவைத் தான் திறக்கவில்லை ஒரு குரல் கொடுத்தாவது பதில் பேசலாமே, நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நாரணன் பெருமையை ஊர் போற்றத் துதித்தால் அவர் பேரின்பத்தை நமக்கு பரிசாகத் தருவார். அதை விட்டுவிட்டு சிற்றின்பமான இந்த உறக்கம் உனக்குத் தேவையா?  அரசியல்வாதிகள் சொன்ன வாக்கினைத் தவறுவது போல, அன்று யமனிடம் வாய் தவறி வரம் கேட்டு தூக்கத்தை வரமாக பெற்றுக் கொண்டானே கும்பகர்ணன் அவனிடமிருந்து நீ தூக்கத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டாயா? அல்லது உனக்கும் அவனுக்கும் தான் போட்டியா? இல்லை அவன் தான் உன்னிடம் தோற்று விட்டானா.?  எல்லையற்ற உன் சோம்பலை துறந்துவிடு, வா வந்து இவ்வாசல் கதவை திறந்துவிடு.. என உறங்கிக...

9. தூமணி மாடத்து…

 9. தூமணி மாடத்து... #மார்கழியின்_மறை பாலுமகேந்திரா, பி.சி.ஶ்ரீராம், சந்தோஷ்சிவன், மணிகண்டன் போன்ற புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் படமாக்கும் காட்சிகள் கலைநயம் மிக்கதாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் காட்சிக்கேற்ற அழகான லைட்டிங்.! இயற்கையாகவோ செயற்கையாகவோ வரும் ஒளியின் மூலம் அந்தக் காட்சியை மெருகு ஏற்றுவார்கள். ஆண்டாளும் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.! ஆண்டாள் இப்பாசுரத்தில் நம் கண்முன்னே அழகான காட்சியாக லைட்டிங் அமைக்கிறார் இப்படி … காமிரா வைட் ஆங்கிளில் ஒரு வீட்டைக் காட்டுகிறது.. சுற்றிலும்  அதிகாலை இருள் சூழ்ந்த வீட்டினுள் ஒரு அழகான விளக்கு மாடத்தில் அலங்காரமான விளக்குகள் எரிகின்றது. அங்கு மணிகளுடன் தொங்கும் வெண்ணிற திரைச் சீலைகள் லேசாக அசைகின்றன!  கண்களை உறுத்தாத விளக்குகளின் வெளிச்சத்துடன் மணம் கமழும் சாம்பிராணிப் புகை அறையெங்கும் பரவிக்கிடக்கிறது! மெல்ல காமிரா பார்வேர்டில் ஜூம் ஆகிறது. அங்கே கட்டிலில் இலவம் பஞ்சு மெத்தையில் உறங்கிக் கொண்டு இருக்கிறாள் ஒருத்தி.  அப்படியே இந்த காட்சியைக் கற்பனை செய்து பார்த்தால்.. ஆஹா ஒரு மணிரத்னம் படம் போலவோ ஷங்கர் படம் போலவோ இருக்கிற...

8. கீழ்வானம் வெள்ளென்று…

 8. கீழ்வானம் வெள்ளென்று... #மார்கழியின்_மறை “வெள்ளென” வந்துருப்பா” மதுரை மாவட்ட மக்கள் பேசும் மொழியில் இன்றைக்கும் பயன்படுத்தும் வார்த்தை இது. வெள்ளென என்பது அதிகாலையை குறிக்கும் சொல்லாகும்! ஆனால் நட்டநடு சென்டர் என்ற விளிப்பது போல “காலையில் வெள்ளென வந்துரு” என்றால் காலையில் சீக்கிரமா வந்துரு என்று அர்த்தமாகும். இதை வட்டார வழக்குத் தமிழ் அல்லது பாமர மக்களின் தமிழ் என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். பைய, சிலம்புவது, வெள்ளென போன்ற சொற்கள் பாசுரங்களிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ளன! அதன் அர்த்தம் சிதையாமல் 1300 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் பேசும் வழக்கில் இந்தச் சொற்கள் உள்ளன!  உலகில் வேறெந்த மொழிக்கும் இத்தனை நெடிய மொழித் தொடர்ச்சி கிடையாது! நம் தமிழ் மொழியில் மட்டுமே இப்படி வார்த்தைகள் இன்றும் பயனில் உள்ளது. இதுவே நம் தமிழின் சிறப்பாகும். கீழ் வானம் வெள்ளென்று எனத் துவங்கும் இப்பாசுரத்தில் ஆண்டாள் ஒரு மெல்லிய அங்கத நகைச்சுவையை கலந்து துவக்குகிறார். “அடியேய் தூங்கு மூஞ்சிப் பெண்ணே பார் கீழ்வானம் விடிந்து புல் வெளியில் எருமைகள் பரந்து மேய்கின்றன” நன்றாகக் கவனியுங்கள் பாசுரங்க...

7. கீசு கீசு என்று…

 7.கீசு கீசு என்று... #மார்கழியின்_மறை ஆறாவது பாசுரத்தில் பல்வேறு இயற்கையான சப்தங்களை வர்ணித்த ஆண்டாள் ஏழாவது பாசுரத்தில் மனிதர்களின் செயல்களால் உருவாகும் சப்தங்களை ஒரு தேர்ந்த சவுண்ட் என்ஜினியரின் இசைக் கோர்வை போல தொகுக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு சுவாசம் போல உயிர் தருவது RR எனப்படும் ரீ - ரெகார்டிங் தான்! ஆண்டாள் மிக அழகாக இந்த பாசுரத்தில் எழுதியிருக்கும் ஒலிகளை  நாம் படிக்கும் போதே கேட்கலாம்! மிகுந்த ரசனை படைத்தவர்களால் தான் இப்படி ஆழ்ந்து கவனித்து எழுத முடியும். அன்றே ஆஸ்கார் விருது இருந்திருந்தால் சிறந்த சவுண்ட் இஞ்சினியர் விருது பெற்ற இந்தியாவின் முதல் ‘பூக்குட்டி’ஆகியிருப்பார் கோதை பெருமாட்டி!  ஆண்டாள் பாடிய அதிகாலையே பல்வேறு ஒலிகளின் கதம்பமாக விடிகிறது! கீச் கீச்சென கரிக்குருவிகள் தங்களுக்குள் கலந்து உரையாடும் அந்த ஒலி உங்களுக்கு கேட்கவில்லையா? இதோ நறுமண மலர்கள் சூடியதால் மணம் வீசும் கூந்தல் பெற்ற ஆயர்குலப் பெண்கள் தயிரை மண் பானையில் மத்தால் கடைகிறார்கள். பானையில் தயிர் சுழலும் ஒலியே பெரும் இரைச்சலாக ஒலிக்கிறதே அது கேட்கவில்லையா? ஆச்சியர் தயிர் கடையும் மத்தை முன்...